உலக செய்திகள்

கொரோனா வைரஸ்; ஈரானில் பலி எண்ணிக்கை 107 ஆக உயர்வு

ஈரானில் கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 107 ஆக உயர்வடைந்து உள்ளது.

தினத்தந்தி

தெஹ்ரான்,

சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று 81 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகளவில் சுமார் 3,198 பேர் பலியாகியுள்ளனர். 93,123 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 50,675 பேர் நோய் தொற்றிலிருந்து குணமாகியுள்ளனர்.

ஈரானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 92 ஆக அதிகரித்து இருந்தது. நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,822 ஆக அதிகரித்து இருந்தது.

கடந்த 24 மணிநேரத்தில் 15 பேர் உயிரிழந்து உள்ளனர். அதனுடன், 591 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஈரானில் கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை இன்று 107 ஆக உயர்வடைந்து உள்ளது. வைரசுக்கு பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை கடந்த 24 மணிநேரத்தில் 3,513 ஆக அதிகரித்து உள்ளது.

இதனை அந்நாட்டு சுகாதார அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி கியானவுஷ் ஜஹான்பூர் உறுதிப்படுத்தி உள்ளார். அந்நாட்டில் தெஹ்ரான், குவாம், கிலான் மற்றும் எஸ்பஹான் ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டவையாக உள்ளன.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்