உலக செய்திகள்

ஐஎஸ் தீவிரவாத இயக்கம் முடிவுக்கு வந்து விட்டது- ஈரான் ஜனாதிபதி

ஐஎஸ் தீவிரவாத இயக்கம் முடிவுக்கு வந்துவிட்டதாக ஈரான் ஜனாதிபதி ஹசன் ருஹானி அரசு தொலைக்காட்சியில் அறிவித்துள்ளார்.

தினத்தந்தி

ஈரான் மற்றும் சிரியா பகுதிகளை கைப்பற்றி தங்களுக்கென்று தனி தேசத்தை உருவாக்கிய ஐஎஸ் தீவிரவாத அமைப்பு, படுகொலை, பெண்கள் சித்ரவதை உட்பட பல கொடூரங்களை அரங்கேற்றி வந்தது. இவர்களுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான படைகள், ரஷ்யா மற்றும் ஈரான் ராணுவம் களமிறங்கியது, படிப்படியாக ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் பிடியில் இருந்த நகரங்களை மீட்டெடுக்க தொடங்கினர்.

இந்நிலையில் ஐஎஸ் தீவிரவாத இயக்கம் முடிவுக்கு வந்துவிட்டதாக ஈரான் ஜனாதிபதி ஹசன் ருஹானி அரசு தொலைக்காட்சியில் நேரடியாக மக்களுக்கு அறிவித்தார்.அத்துடன் ஈரான் புரட்சி காவலர்கள் படையின் மேஜர் ஜெனரல் குவசம் சோலிமணி -யும் இதே அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த வாரம் சிரியாவின் கிழக்கு பகுதியில் உள்ள நகரை கைப்பற்றுவதே இறுதி என ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்