கோப்புப்படம் 
உலக செய்திகள்

சிரியா மீது இஸ்ரேல் ராக்கெட் தாக்குதல் - ஒருவர் படுகாயம்

சிரியா மீது இஸ்ரேல் நடத்திய ராக்கெட் தாக்குதலில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

தினத்தந்தி

டமாஸ்கஸ்,

கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்து இருப்பது கோலான் குன்றுகள் ஆகும். 1967-ல் இஸ்ரேல்-அரபு நாடுகள் இடையேயான போரின்போது, சிரியாவிடம் இருந்து கோலான் குன்று பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்துக்கொண்டது. அதன்பின்னர் ஈரான் ஆதரவு பெற்ற போராளிகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்கு இதை இஸ்ரேல் பயன்படுத்தி வருகிறது. கடந்த மாதம் நடத்திய தாக்குதலில் 3 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 4.20 மணியளவில் இங்கிருந்து சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ்சின் தென்பகுதியை குறிவைத்து ராக்கெட் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது.

பல ராக்கெட்டுகளை சிரியாவின் வான்பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியது. இருப்பினும் இந்த தாக்குதலில் ஒருவர் படுகாயம் அடைந்தார். பொருட்சேதமும் ஏற்பட்டது. படுகாயம் அடைந்தவர் உடனடியாக அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை