கோப்புப்படம் 
உலக செய்திகள்

இத்தாலியில் புதிதாக 13,447 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 476 பேர் பலி

இத்தாலியில் கடந்த 24 மணி நேரட்தில் புதிதாக 13,447 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது,

ரோம்,

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் 3-ம் இடத்திலும் உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் இத்தாலி 8-ம் இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இத்தாலி நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் அங்கு இதுவரை கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 37 லட்சத்து 93 ஆயிரத்து 033 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் ஒரே நாளில் 476 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 15 ஆயிரத்து 088 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 31,58,725 ஆக அதிகரித்துள்ளது. தற்போது இத்தாலியில் சுமார் 5,19,220 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 3,526 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.