உலக செய்திகள்

'சாட்-ஜிபிடி'க்கு தடை விதித்தது இத்தாலி

‘சாட்-ஜிபிடி’க்கு இத்தாலியின் தரவு பாதுகாப்பு ஆணையம் தடை விதித்துள்ளது.

தினத்தந்தி

'சாட்-ஜிபிடி' எனும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வரவு, சாதகமா பாதகமா என்பதுதான் இன்றைக்குப் பல தளங்களிலும் விவாதிக்கப்படும் விஷயமாக உள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த 'ஓபன் ஏஐ' என்ற நிறுவனத்தின் படைப்பான 'சாட்-ஜிபிடி' கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பயன்பாட்டுக்கு வந்தது. தற்போது உலகளவும் லட்சக்கணக்கான மக்கள் 'சாட்-ஜிபிடி'யை பயன்படுத்தி வருகின்றனர். எனினும் சாட்-ஜிபிடி வருகையால், சில துறைகளில் வேலைவாய்ப்பு பறிபோகும் அச்சமும், மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் கற்றல் மற்றும் சிந்தனை திறன் இல்லாமல் போகும் அபாயமும் இருப்பதாக நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக அமெரிக்காவும், கனடாவும் கல்வித் துறையில் சாட்-ஜிபிடியைத் தடை செய்துள்ளன.

இந்த நிலையில் ஐரோப்பிய நாடான இத்தாலி நாடு முழுவதும் 'சாட்-ஜிபிடி'க்கு பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளது.

'சாட்-ஜிபிடி' அதன் பயனர் தரவுகளை பாதுகாப்பது இல்லை என்பதாலும், பயனர் வயதை சரிபார்ப்பதில்லை என்பதாலும் தற்காலிகமாக அதன் பயன்பாட்டை முடக்குவதாக இத்தாலியின் தரவு பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு