உலக செய்திகள்

இவான்கா டிரம்பின் தனி உதவியாளருக்கு கொரோனா பாதிப்புக்கான பரிசோதனை

இவான்கா டிரம்பின் தனி உதவியாளருக்கு கொரோனா பாதிப்புக்கான பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

வாஷிங்டன்

இவான்கா டிரம்பின் தனிப்பட்ட உதவியாளர் கேடிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட மூன்றாவது வெள்ளை மாளிகை ஊழியராக அவர் உள்ளார். என்று ஒரு ஊடக அறிக்கை சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மகளுக்கு தனிப்பட்ட வகையில் அவர் உதவியாளராக இருந்தார். ஆனால் பலவாரங்களாக அவர் இவான்கா டிரம்புடன் இல்லை.

ஏறக்குறைய இரண்டு மாதங்களாக அவர் தொலைபேசியில் பணிபுரிந்து வருகிறார், அவர் எச்சரிக்கைக்காக சோதனை செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளை மாளிகை இல்லத்தில் ஊழியர்கள் முககவசங்கள் அணிவதை இப்போது வெள்ளை மாளிகை உறுதி செய்து வருகிறது, மேலும் மேற்கு பகுதி முழுவதும் கொரோனா வைரஸ் சோதனைகள் மற்றும் வெப்பநிலை சோதனைகள் அதிகரிக்கப்படுகின்றன. வெஸ்ட் விங் அடிக்கடி சுத்திகரிக்கப்படுகிறது என அதிகாரி ஒருவர் கூறினார்.

வெள்ளை மாளிகையின் கொரோனா வைரஸ் பணிக்குழுவை வழிநடத்தும் பென்ஸ், சமீபத்தில் மாயோ கிளினிக்கிற்கு முககவசம் அணியாமல் பயணம் மேற்கொண்டார்.

அரிசோனாவில் முககவசம் தயாரிக்கும் தொழிற்சாலை சுற்றுப்பயணத்தின் போது டிரம்ப் முககவசம் அணிய மறுத்துவிட்டார் என்பது குறிப்பிட தக்கது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை