உலக செய்திகள்

ஜமாத்-உத்-தவா அமைப்பின் சொத்துகள் பறிமுதல் - பாகிஸ்தான் அரசு நடவடிக்கை

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜமாத்-உத்-தவா அமைப்பின் சொத்துகளை பறிமுதல் செய்து பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

தினத்தந்தி

இஸ்லாமாபாத்,

புலவாமா தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் இயங்கி வரும் பயங்கரவாத அமைப்புகள் மீது அந்த நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது ஜமாத்-உத்-தவா பயங்கரவாத அமைப்பு மற்றும் அதன் அறக்கட்டளையான பலா-இ-இன்சானியத் ஆகியவற்றுக்கு சொந்தமான மதரசாக்கள் (இறையியல் கல்லூரி) மற்றும் சொத்துகளை பாகிஸ்தான் அரசு பறிமுதல் செய்துள்ளது.

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் அரசியல் இயக்கமாக விளங்கி வரும் ஜமாத்-உத்-தவாவுக்கு சொந்தமாக 300 மதரசாக்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள் பாகிஸ்தானில் இயங்கி வருகிறது. சக்வால், அட்டோக் மாவட்டங்களில் உள்ள மதரசாக்களை அரசு அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும், ஜமாத்-உத்-தவா அமைப்பின் சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கிடையே புலவாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் பாகிஸ்தானில் இல்லை என அந்த நாட்டு ராணுவம் மறுத்துள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது