உலக செய்திகள்

ஜப்பானில் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபேயின் நினைவுதினம்

ஜப்பானில் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபேயின் நினைவுதினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தினத்தந்தி

ஜப்பான் நாட்டின் நீண்ட கால பிரதமராக இருந்த பெருமைக்குரியவர் ஷின்ஜோ அபே. இவர் கடந்த ஆண்டு அங்குள்ள நாரா என்ற பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது டெட்சுயா யமகாமி என்ற நபர் அவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றார். இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். முன்னாள் பிரதமரான ஷின்ஜோ அபே கொலை செய்யப்பட்டு தற்போது ஓராண்டு முடிவடைந்துள்ளது. இந்தநிலையில் அங்குள்ள ஜோஜோஜி என்ற புத்த கோவிலில் அவரது நினைவுதினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் புமியோ கிஷிடா, அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு அவரது புகைப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து