Credit: Reuters Photo 
உலக செய்திகள்

ஜன்னலில் விரிசல்; ஜப்பான் விமானம் அவசரமாக தரையிறக்கம்

விமானி அறையில் இருந்த ஜன்னலில் விரிசல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

தினத்தந்தி

டோக்கியோ,

ஜப்பானின் மிகப்பெரிய விமான நிறுவனமான ஆல் நிப்பான் ஏர்வேஸின் (ஏஎன்ஏ) பயணிகள் விமானம் சப்போரோவில் இருந்து டோயாமாவுக்கு நேற்று உள்ளூர் நேரப்படி காலை 11.20 மணிக்கு பறந்து கொண்டிருந்தது. அதில் 63 பயணிகள் இருந்தனர்.

அப்போது விமானி அறையில் இருந்த ஜன்னலில் விரிசல் ஏற்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த விமானம் மீண்டும் சப்போரோ நியூ சிட்டோஸ் விமான நிலையத்தில் மதியம் 12.10 மணியளவில் தரையிறக்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதுடன், 63 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்