உலக செய்திகள்

ரியாத்- மும்பை ஜெட் ஏர்வேஸ் விமானம் ஓடுபாதையில் சறுக்கியது, பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை

ரியாத்- மும்பை ஜெட் ஏர்வேஸ் விமானம் ஓடுபாதையில் சறுக்கியது.

தினத்தந்தி

ரியாத்,

சவூதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் இருந்து 142 பயணிகள் மற்றும் 7 விமான சிப்பந்திகளுடன் மும்பைக்கு B737-800 என்ற விமானம் புறப்பட தயாரானது. இந்த விமானம், டேக் ஆஃப் ஆவதற்காக, ஓடுபாதையில் சீறிப்பாய்ந்த போது, விமானம் சறுக்கியது.

இதனால், உடனடியாக டேக் ஆப் செய்வது நிறுத்தப்பட்டு விமான நிலையத்திலேயே விமானம் நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தில், விமானத்தில் இருந்த யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து பத்திரமாக இறக்கப்பட்டு, விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஜெட் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு