உலக செய்திகள்

அமெரிக்கா: கான்சாஸ் நகரில் துப்பாக்கிச் சூடு - 2 பேர் பலி, 15 பேர் காயம்

அமெரிக்காவின் கான்சாஸ் நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 2 பேர் பலியாகினர். மேலும் 15 பேர் காயமடைந்தனர்.

தினத்தந்தி

கான்சாஸ் நகர்(அமெரிக்கா),

அமெரிக்காவின் கான்சாஸ் நகரில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாகினர்.

மதுபானக் கூடத்தில் நுழைவதற்கு வரிசையில் நின்றுகொண்டிருந்தவர்களை நோக்கி மர்மநபர் ஒருவர் சுட்டதாகவும், அதில் வாகன நிறுத்துமிடத்தில் இருந்த பெண் உட்பட 2 பேர் உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 15 பேர் உள்ளூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு கன்சாஸ் நகர மேயர் குயின்டன் லூகாஸ் தனது டுவிட்டரில் இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்