உலக செய்திகள்

முடிசூட்டிக்கொண்ட பிறகு மன்னர் சார்லஸ் இந்தியா வர வாய்ப்பு - இந்திய வம்சாவளி தொழில் அதிபர் தகவல்

இந்தியாவிற்கு பயணம் செய்வது தொடர்பாக விரைவில் திட்டமிடலாம் என மன்னர் சார்லஸ் கூறியதாக கரன் பிலிமோரியா தெரிவித்தார்.

தினத்தந்தி

லண்டன்,

இங்கிலாந்து நாட்டின் மன்னராக சார்லஸ் நாளை (6-ந் தேதி) முடி சூட்டப்படுகிறார். இதையொட்டி லண்டன் நாடாளுமன்ற வளாகத்தில் சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் இந்திய வம்சாவளி தொழில் அதிபர் கரன் பிலிமோரியா கலந்து கொண்டார். அப்போது நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஒரு கலந்துரையாடலுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் கரன் பிலிமோரியா பேசும்போது, "நாம் இந்தியாவுக்கு அரசுமுறைப்பயணம் மேற்கொள்ள வேண்டும். இது இருதரப்பு உறவுகளில் அபாரமான தாக்கத்தை ஏற்படுத்தும். இங்கிலாந்து-இந்தியா இருதரப்பு வர்த்தக உடன்பாட்டுக்கு உதவும் என மன்னரிடம் கூறினேன். மன்னர், இந்தியாவின் நண்பர். அவர் இந்தியா மீது மிகுந்த பற்றுதல் வைத்திருக்கிறார். அவர், இந்தியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள நான் விருப்பம் கொண்டுள்ளேன். இது தொடர்பாக விரைவில் திட்டமிடலாம் என தெரிவித்தார்" என்று குறிப்பிட்டார். எனவே முடிசூட்டிக்கொண்ட பின்னர் மன்னர் சார்லஸ் இந்தியாவுக்கு அரசுமுறை பயணமாக வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை