உலக செய்திகள்

குல்பூஷண் ஜாதவ் விவகாரம்: பாகிஸ்தான் சட்டப்படி நடவடிக்கையை தொடரும் - இம்ரான் கான்

குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில் பாகிஸ்தான் சட்டப்படி நடவடிக்கையை தொடரும் என இம்ரான் கான் கூறியுள்ளார்.

தினத்தந்தி

குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் விதித்த மரண தண்டனையை சர்வதேச கோர்ட்டு நிறுத்தி வைத்து நேற்று தீர்ப்பு அளித்தது.

ஜாதவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று பாகிஸ்தானை இந்தியா வலியுறுத்தி உள்ளது.

இதற்கிடையே சர்வதேச கோர்ட்டின் தீர்ப்பு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், குல்பூஷண் ஜாதவை குற்றத்தில் இருந்து சர்வதேச கோர்ட்டு விடுவிக்காதது மற்றும் இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப வேண்டும் என உத்தரவிடாததை பாராட்டுகிறேன். பாகிஸ்தான் மக்களுக்கு எதிரான குற்றங்களை அவர் செய்துள்ளார். பாகிஸ்தான் தொடர்ந்து சட்டப்படி செய்ய வேண்டியதை செய்யும் என கூறி உள்ளார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு