கோப்புப்படம் 
உலக செய்திகள்

சாம்சங் நிறுவன தலைவராக லீ ஜே யோங் தேர்வு

சாம்சங் நிறுவன தலைவராக லீ ஜே யோங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

சியோல்,

தென்கொரியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பிரபல பன்னாட்டு நிறுவனமான சாம்சங், செல்போன், டிவி, ஏசி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் விற்பனையில் முன்னணியில் உள்ளது.

இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் செயல் தலைவராக லீ ஜே யோங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் சாம்சங் நிறுவனத்தை நிறுவிய லீ பியுங் பங் குடும்பத்தை சேர்ந்த 3-ம் தலைமுறை நபராவார். 54 வயதான லீ ஜே யோங் கடந்த 2012-ம் ஆண்டு முதல் சாம்சங் நிறுவனத்தின் துணை தலைவராக இருந்து வருகிறார்.

ஜே ஒய் லீ என்றும் அழைக்கப்படும் லீ ஜே யோங் உழல் வழக்கில் சிக்கி சிறை தண்டனை அனுபவித்த நிலையில் தென்கொரியா அரசு கடந்த ஆகஸ்டு மாதம் அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவரை வழக்கில் இருந்து விடுவித்தது குறிப்பிடத்தக்கது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்