உலக செய்திகள்

நோக்கியா மொபைல் போனை விழுங்கிய நபர்;அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்

மொபைலின் பேட்டரி குறித்து தான் எங்களுக்கு மிகவும் கவலையாக இருந்தது, ஏனென்றால் அது மனிதனின் வயிற்றில் வெடிக்கக் கூடும்

தினத்தந்தி

பிரிஸ்டினா

கோசாவா நாட்டில் ஓல்டு பிரிஸ்டினா எனும் பகுதியில் வசித்த 33 வயது நபர் ஓருவர் 2000 ம் ஆண்டு மாடல் பழைய நோக்கியா 3310 மாடல் மொபைல் போனை விழுங்கியுள்ளார்.இதை தொடர்ந்து அந்த நபர் வயிற்று வலியால் துடித்து உள்ளார்.

அதையடுத்து மருத்துவமனைக்கு சென்ற அவரை டாக்டர் எக்ஸ்-ரே மற்றும் எண்டோஸ்கோபி எடுத்து செல்போன் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து 2 மBi நேரம் போராடி அதை அறுவை சிகிச்சை மூலமாக அகற்றியுள்ளனர்.

அறுவைசிகிச்சைக்குப் பிறகு, டாக்டர் டெல்ஜாகு தனது பேஸ்புக்கில் தொலைபேசியின் புகைப்படங்களையும், மனிதனின் வயிற்றுக்குள் இருந்தபோது எக்ஸ்-ரே மற்றும் எண்டோஸ்கோபி படங்களையும் பகிர்ந்து உள்ளார்.

மேலும் மொபைலின் பேட்டரி குறித்து தான் எங்களுக்கு மிகவும் கவலையாக இருந்தது, ஏனென்றால் அது மனிதனின் வயிற்றில் வெடிக்கக் கூடும்" என்று அவர் கூறினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை