உலக செய்திகள்

மத வழிபாட்டு தலத்திற்கு பார்சலில் வந்த பன்றி இறைச்சி - போலீசார் விசாரணை

இந்த சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தினத்தந்தி

சிங்கப்பூர்,

சிங்கப்பூர் நாட்டின் செராங்கொன் பகுதியில் இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மசூதி உள்ளது. இந்நிலையில், இந்த வழிபாட்டு தலத்திற்கு நேற்று பார்சல் வந்தது

அந்த பார்சலில் பன்றி இறைச்சி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், மத வழிபாட்டு தலத்தில் தீவிர சோதனை நடத்தினர். மேலும், மசூதிக்கு பார்சலில் பன்றி இறைச்சி அனுப்பியது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு