உலக செய்திகள்

நேபாளத்தில் ஏப்ரல் 27 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நேபாளத்தில் வரும் 27 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

காத்மாண்டு,

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று நேபாளம். இமயமலை அடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் அழகிய நாடான நேபாளத்திலும் கொரோனா வைரஸ் தாக்கம் காணப்படுகிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், கடந்த மார்ச் 24 ஆம் தேதி நேபாளத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்த ஊரடங்கு நாளையுடன் முடிவுக்கு வர இருந்த நிலையில், வரும் 27 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக நேபாள அரசு அறிவித்துள்ளது. ஊரடங்கு கால கட்டத்தின் போது, அத்தியாவசிய தேவைகளைத் தவிர அனைத்து அரசு அலுவலகங்களும் மூடப்படும் எனவும், உள்நாட்டு,வெளிநாட்டு விமானப்போக்குவரத்து நிறுத்தப்படும் என்றும் நேபாள அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகளவில் 1,20,600 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை