உலக செய்திகள்

ஈராக்கில் புதிய அதிபர், பிரதமர் தேர்வு

ஈராக் புதிய அதிபராக பர்ஹாம் சாலேவும், பிரதமராக அதேல் அப்துல் மாஹ்தியும் தேர்வு செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

பாக்தாத்,

ஈராக்கின் புதிய அதிபராக பர்ஹாம் சாலே நாடாளுமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஈராக் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் குர்திஸ் இனத்தைச் சேர்ந்த குர்திஸ் தேசபக்த யூனியன் கட்சியின் வேட்பாளராக பர்ஹாம் சாலேவும், குர்திஸ் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக பவுட் ஹூசைனும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பர்ஹாம் சலே பெரும்பான்மையுடன் ஈராக்கின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

பார்ஹம் சாலே ஈராக்கின் மதவாத அரசியல்வாதி ஆவார். பிரிட்டனில் பொறியியல் கல்வி பயின்றவர். மேலும் ஈராக்கின் குர்திஸ் மாகாணத்தின் பிரதமராகவும், ஈராக் கூட்டாட்சி அரசாங்கத்தின் துணை பிரதமராகவும் இருந்துள்ளார்.

இந்நிலையில் புதிய அதிபர் பார்ஹம் சாலே, பிரதமர் பதவிக்கு ஷியா பிரிவைச் சேர்ந்த அதேல் அப்துல் மாஹ்தியை தேர்வு செய்தார்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்