உலக செய்திகள்

சவுதி அரேபியா மீது ஏவப்பட்ட ஏவுகணையில் ஈரானின் சின்னம் ஐ.நா அமெரிக்க தூதர்

சவுதி அரேபியாவின் ரியாத்தை குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணையில் ஈரானின் சின்னம் இருந்ததாக ஐ.நாவுக்கான அமெரிக்க தூதர் கூறியுள்ளார்.

தினத்தந்தி

நேற்று மன்னரின் தலைமையகம் மற்றும் அரசவை அமைந்துள்ள அல் யாமாமா அரண்மனையை குறித்து பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் ஏமனிலிருந்து நடத்தப்பட்டது. இதனை சவுதி அரேபியா இடைமறித்து அழித்ததாக அல் மாசிரா தொலைக்காட்சி தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த ஏவுகணையில் ஈரானின் சின்னம் இருந்ததாக ஐ.நாவுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே அறிவித்துள்ளார். அவர் கூறுகையில், ஈரானின் குற்றங்களை அம்பலப்படுத்த நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், அவ்வாறு இல்லையெனில் ஒரு மோசமான பிராந்திய மோதலுக்கு ஈரான் வித்திடும் என தெரிவித்துள்ளார்.ஆனால் இக்குற்றச்சாட்டுகளை ஈரான் மறுத்துள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்