கோப்புப்படம் 
உலக செய்திகள்

ஊழல்வாதிகள் தண்டிக்கப்படுவதற்கு முன் தேர்தலை நடத்தும் திட்டம் இல்லை: ஜப்பான் பிரதமர் உறுதி

ஜப்பானில் ஆளுங்கட்சியினர் நிதி சேகரிப்பு நிகழ்ச்சி மூலம் பெற்ற வருவாயை ஊழல் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

தினத்தந்தி

டோக்கியோ,

ஜப்பானில் பிரதமர் புமியோ கிஷிடா தலைமையிலான லிபரல் டெமாக்ரடிக் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே பிரிவை சேர்ந்தவர்கள் நிதி சேகரிப்பு நிகழ்ச்சி மூலம் பெற்ற வருவாயை ஊழல் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து பிரதமர் புமியோ கிஷிடா விலகினார். மேலும் முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இந்த விவகாரம் ஆளுங்கட்சிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

அங்கு தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு (2025) அக்டோபர் வரை உள்ளது. ஆனால் நாடாளுமன்றத்தை திடீரென கலைத்து தேர்தலை நடத்த பிரதமருக்கு அதிகாரம் உள்ளது. எனினும் கட்சி நிதி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் முழுமையாக தண்டிக்கப்படும்வரை தேர்தல் நடத்தும் திட்டமில்லை. எனவே அவர்கள் அனைவரும் கூடிய விரைவில் தண்டிக்கப்படுவார்கள் என பிரதமர் புமியோ கிஷிடா சூளுரைத்தார். இது ஜப்பான் அரசியலில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து