Photo Credit: AFP 
உலக செய்திகள்

உக்ரைன் மீது போர்: ரஷியாவில் இருந்து வெளியேருவதாக நோக்கியா அறிவிப்பு

உக்ரைன் மீது போர் தொடுத்தன் காரணமாக ரஷியாவில் இருந்து பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் சேவையை நிறுத்தின

ஹெல்சின்கி,

தொலைத்தொடர்பு நிறுவனமும் 5 ஜி தொழில்நுட்ப விநியோக நிறுவனமான நோக்கியா, ரஷிய சந்தையில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்தன் காரணமாக ரஷியாவில் இருந்து பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் சேவையை நிறுத்தின. பல உற்பத்தி நிறுவனங்களும் ரஷியாவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து வரும் நிலையில், தற்போது நோக்கியோ நிறுவனமும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளது.

பின்லாந்து நாட்டை தலைமையிடமாகக் கொண்ட நோக்கியா, தனது மொத்த வணிகத்தில் 2 சதவீதம் மட்டுமே ரஷியாவின் பங்களிப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், இதனால் தனது ஆண்டு வர்த்தகத்தில், இது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT