உலக செய்திகள்

பாலகோட் விமானப்படை தாக்குதலில் எங்களுக்கு எந்தஒரு பாதிப்பும் கிடையாது - பாகிஸ்தான் ராணுவம்

பாலகோட் விமானப்படை தாக்குதலில் எங்களுக்கு எந்தஒரு பாதிப்பும் கிடையாது என பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது.

தினத்தந்தி

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை விமானங்கள் பிப்ரவரி இறுதியில் பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு பெரும் இழப்பு நேரிட்டதாக கூறப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் எங்களுக்கு எந்தஒரு பாதிப்பும் கிடையாது என கூறிவருகிறது.

இப்போதும், இந்தியா நடத்திய பாலகோட் விமானப்படை தாக்குதலில் எங்களுக்கு எந்தஒரு பாதிப்பும் கிடையாது என பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது. அங்கு உண்மையை பார்க்க வேண்டும் என்று விரும்பினால் இந்திய பத்திரிக்கையாளார்கள் அங்கு சென்று பார்வையிட தேவையான வசதிகளை செய்து தருவதாகவும் கூறியுள்ளது.

பாகிஸ்தான் முதலில் சர்வதேச பத்திரிக்கையாளர்களை அங்கு அனுமதிக்கவில்லை . சம்பவம் நடந்து 40 நாட்கள் ஆன பின்னர்தான் அனுமதி கொடுத்தது. அப்போது உள்ளூர் மக்கள் பேசுகையில் வெடிகுண்டு சத்தம் கேட்டது என்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்