கோப்புப்படம் 
உலக செய்திகள்

பாகிஸ்தான்-ஈரான் மந்திரிகள் தொலைபேசியில் பேச்சு: பரஸ்பர நம்பிக்கை குறித்து ஆலோசனை

இருநாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகளும் நல்லெண்ண செய்திகளை பரிமாறிக் கொண்டனர்.

தினத்தந்தி

இஸ்லாமாபாத்,

கடந்த 16-ந் தேதி, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ஈரான் விமானப்படை ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக, கடந்த 18-ந் தேதி, ஈரானில் உள்ள பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் மீது பாகிஸ்தான் விமானப்படை வான்வழி தாக்குதல் நடத்தியது. இதனால் இரு நாடுகளிடையே பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஜலில் அப்பாஸ் ஜிலானியும், ஈரான் வெளியுறவு மந்திரி உசைன் அமிர்-அப்துல்லாகியனும் நேற்று தொலைபேசியில் பேசிக்கொண்டனர். அப்போது, பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பு உணர்வு அடிப்படையில் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் ஈரானுடன் இணைந்து பணியாற்ற பாகிஸ்தான் தயாராக இருப்பதாக ஜலில் அப்பாஸ் ஜிலானி தெரிவித்தார்.

பாதுகாப்பு பிரச்சினைகளில் நெருங்கிய ஒத்துழைப்பு நிலவ வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். முன்னதாக, இருநாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகளும் நல்லெண்ண செய்திகளை பரிமாறிக் கொண்டனர். அதுபோல், பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவ தலைவர்கள், உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில், ஈரானுடனான மோதல் குறித்து விவாதித்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து