உலக செய்திகள்

பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்: 7 ராணுவ வீரர்கள் பலி; ஷபாஸ் ஷெரீப் கண்டனம்

வெடிகுண்டு தாக்குதலுக்கு எந்தவித பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

தினத்தந்தி

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து உள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும் ராணுவ முகாம், போலீஸ் நிலையங்கள் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்துகின்றனர்.

இந்தநிலையில் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் ராணுவத்தினர் ரோந்து பணி மேற்கொண்டனர். லக்கி மார்வார்ட் நகரில் சென்றபோது அந்த வாகனத்தை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும் அந்த வாகனத்தில் பொருத்தப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில் ராணுவ வீரர்கள் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இதற்கிடையே தாக்குதல் சம்பவத்துக்கு பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்