உலக செய்திகள்

பாகிஸ்தான் அதிபருக்கு 2-வது முறையாக கொரோனா தொற்று உறுதி

பாகிஸ்தானின் அதிபர் ஆரிஃப் ஆல்விக்கு 2-வது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

இஸ்லாமாபாத்,

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா தொற்றின் 5-வது அலை பரவி வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானின் அதிபர் ஆரிஃப் ஆல்விக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது 2-வது முறையாக அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஆரிஃப் ஆல்வி, கடந்த 5 நாட்களாக தனக்கு தொண்டை வலி இருந்ததாகவும், 2 நாட்களாக லேசான காய்ச்சல் இருந்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். தனக்கு வேறு கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லாத நிலையில், பரிசோதனையின் போது தனக்கு 2-வது முறையாக கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்