உலக செய்திகள்

பெரு: ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 15 பேர் பலி

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 11 பயணிகள் உள்பட 15 பேர் பலியாகி உள்ளனர்.

லிமா

பெரு நாட்டின் அரேகுய்பா நகரில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று பயணிகளை ஏற்றி கொண்டு புறப்பட்டு சென்றது.

அப்போது அந்த ஹெலிகாப்டர் திடீரென விபத்தில் சிக்கியது. சம்பவம் பற்றி அறிந்ததும் ராணுவ ஹெலிகாப்டர் பாகங்களை தேடுதல் பணி நடந்தது.

இதில், பயணிகள் உள்பட மொத்தம் 15 பேர் பலியானார்கள். அவர்களில் 4 பேர் விமான ஊழியர்கள் மற்றும் 11 பேர் பயணிகள் ஆவர். இதனை அந்நாட்டின் விமான படை உறுதிப்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT