உலக செய்திகள்

உக்ரைன் மீது போர்: ரஷிய தூதரகத்திற்கு நேரில் சென்ற போப் பிரான்ஸிஸ்..!

கத்தோலிக்க தேவாலயங்களின் தலைவரான போப் பிரான்சிஸ், போர் என்பது மனிதநேயத்தின் தோல்வி என குறிப்பிட்டுள்ளார்.

தினத்தந்தி

வாட்டிகன்,

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலால் உக்ரைன் நிலைகுலைந்துள்ளது. மக்கள் பதுங்கு குழிகளிலும் மெட்ரோ ரயில் நிலையங்களிலும் தஞ்சம் புகுந்து வருகின்றனர். இதுவரை நூற்றுக்கணக்கான உயிர்ப்பலி நிகழ்ந்திருக்கிறது. உலக நாடுகள் பலவும் இதற்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், கத்தோலிக்க தேவாலயங்களின் தலைவரான போப் பிரான்சிஸ், போர் என்பது மனிதநேயத்தின் தோல்வி என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, நேற்று வாட்டிகனில் உள்ள ரஷிய தூதரகத்திற்கு நேரில் சென்ற போப் பிரான்ஸிஸ், உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருவது குறித்து தனது கவலையை தெரிவித்தார். மேலும், இவ்விவகாரத்தில் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வதாக உக்ரேனிய கத்தோலிக்க தலைவர்களுக்கு உறுதி அளித்தார். போப் பிரான்ஸிஸ் நேரடியாக ஒருநாட்டின் தூதரகத்திற்கே செல்வது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது