உலக செய்திகள்

பட்ஜெட் நிரகரிப்பால் போர்ச்சுக்கல் நாடாளுமன்றம் கலைப்பு

பட்ஜெட் நிரகரிப்பு காரணமாக போர்ச்சுக்கலில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

லிஸ்பன்,

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போர்ச்சுக்கல்லில் நாடாளுமன்றத்தை கலைத்தும், ஜனவரி மாதம் 30-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தும் அதிபர் மார்செலோ ரெபோலோ டி சூசா அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறார். அங்கு முன்னெப்போதும் இல்லாத வகையில், பட்ஜெட்டை நாடாளுமன்றம் நிராகரித்து விட்டது. இதனால்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு இருக்கிறது.

இதுபற்றி அதிபர் மார்செலோ நாட்டு மக்களுக்கு டெலிவிஷனில் உரையாற்றியபோது, பொருளாதாரம் மற்றும் கொரோனா நெருக்கடியில் இருந்து நாடு வெளியேற முயற்சிப்பதால் பட்ஜெட் முக்கியமானது. அது நிறைவேறாததால் தேர்தல் அவசியமாகிறது என தெரிவித்தார்.

ஆனால் நாடாளுமன்றத்தை கலைப்பதை அதிபர் தவிர்த்து இருக்க முடியும் என்று லிஸ்பன் நோவா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பிரான்சிஸ்கோ பெரைரோ கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு பதிலாக வேறொரு அரசை அமையுமாறு செய்திருக்க முடியும். தொழில்நுட்ப வல்லுனர் தலைமையில் ஒரு அரசாங்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என தெரிவித்தார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு