உலக செய்திகள்

சூடானில் உள்நாட்டு கலவரம்: இருளில் மூழ்கிய தலைநகரம்

வீடுகள், கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவை கடந்த 4 நாட்களாக இருளில் மூழ்கியுள்ளன.

தினத்தந்தி

கார்டூம்,

சூடானில் ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. அதனை எதிர்த்து துணை ராணுவத்தினர் போராடி வருகிறார்கள். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல்போக்கு ஏற்பட்டு உள்நாட்டு கலவரமாக வெடித்துள்ளது. இதில் அப்பாவி பொதுமக்கள் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்து உள்ளனர். இந்தநிலையில் கடந்த 16-ந்தேதி தலைநகர் கார்டூம் அருகே மியாரோ நீர்மின் நிலையம் மீது துணை ராணுவப்படை வீரர்கள் டிரோன்கள் வீசி தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்தனர். மேலும் அந்த நீர்மின் நிலையம் கடும் சேதத்திற்குள்ளானது. குறிப்பாக நீர்மின் நிலையத்தின் மின்சார சேமிப்பு கலன்கள் வெடித்து சிதறின. இதனால் அங்கு மின்சாரம் உற்பத்தி பணி பாதிப்புக்குள்ளாகி மின்தடை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தலைநகரில் உள்ள வீடுகள், கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவை கடந்த 4 நாட்களாக இருளில் மூழ்கியது. நீர்மின் நிலையத்தை சீரமைக்கும் பணியில் அந்த நாட்டின் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை