பசிபிக் சமுத்திம்
பசிபிக் சமுத்திரத்தில் இன்று பிற்பகல் 2.58 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கம் 130 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் வெளியிட்ட தகவல் தெரிவிக்கின்றது.
40 ஆயிரம் கி.மீ. பரப்பளவில் அமைந்த பசிபிக் நெருப்பு வளையத்தில் உலகின் 90 சதவீத நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. அதில் உலக அளவில் 81 சதவீத பெரிய நிலநடுக்கங்கள் இந்த பகுதியிலேயே ஏற்படுகின்றன.
இதேபோன்று இந்தோனேசியாவில் இன்று காலை காலை 11.35 மணியளவில் உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.