உலக செய்திகள்

போருக்கு ஆயத்தமாக வேண்டும் : வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்

வடகொரியாவில் உள்ள ராணுவ பல்கலைக்கழகத்தை அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் நேற்று ஆய்வு செய்தார்.

தினத்தந்தி

 பியாங்யாங்,

போருக்கு தயாராகுமாறு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கூறியுள்ளது கொரிய தீப கற்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் அடாவடி போக்கை கையாண்டு வருபவர் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன். தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் மோதி வரும் கிம் ஜாங் உன், உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து அணு ஆயுத சோதனை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், வடகொரியாவின் ராணுவ பல்கலைக்கழகத்தை கிம் ஜாங் உன் நேற்று ஆய்வு செய்த பிறகு பேசியது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கிம் ஜாங் உன் கூறுகையில், "வடகொரியாவை சுற்றி நிலைத்தன்மையற்ற அரசியல் சூழல் உள்ளது. எனவே, கடந்த காலத்தைக் காட்டிலும் இப்போது போருக்கு ஆயத்தமாக வேண்டியுள்ளது" என்றார்.

முன்னதாக, அமெரிக்காவும் தென் கொரியாவும் இராணுவ பயிற்சிகளை அதிகளவில் மேற்கொள்கிறது. இதன் காரணமாக கொரிய தீபகற்பத்தில் போர்ப் பதற்றம் அதிகரித்திருப்பதாக வடகொரியா கூறிய நிலையில், கிம் ஜாங் உன் மேற்கண்டவாறு பேசியுள்ளார்

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்