லண்டன்,
பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை இங்கிலாந்து எம்.பி.க்கள் தொடர்ந்து நிராகரித்து வருவதால் ஒப்பந்தமில்லா பிரெக்ஸிட்டுக்கு வாய்ப்பு அதிகமாகி உள்ளது.
இந்தநிலையில் ராணி இரண்டாம் எலிசபெத் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றினார். அப்போது அவர் 31-ந்தேதிக்குள் பிரெக்ஸிட்டை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என கூறினார். இது குறித்து அவர் கூறுகையில், திட்டமிட்டபடி 31-ந்தேதிக்குள் பிரெக்ஸிட்டை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு அரசு எப்போதுமே முன்னுரிமை அளிக்கும் என கூறினார்.