உலக செய்திகள்

வானில் தோன்றிய 4 நிலவுகள்...ரஷ்யாவில் அரிய நிகழ்வு

இத்தகைய நிகழ்வுகள் கடும் குளிர் நிலவும் பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன.

ரஷ்யா,

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில், இரவு வானத்தில் 4 நிலவுகள் பிரகாசிப்பது போன்ற ஒரு காட்சியை கண்டு மக்கள் திகைத்துப் போனார்கள். இந்த அரிய காட்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு காணப்பட்டது. அதன் புகைப்படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

இந்த வியக்க வைக்கும் காட்சி பாராசெலினே (paraselenae) என்று அழைக்கப்படுகிறது, இது ‘மூன் டாக்’ அல்லது ‘மாக் மூன்’ என்றும் அழைக்கப்படுகிறது.

இது ஒரு வானியல் நிகழ்வு அல்ல, மாறாக வளிமண்டலத்தில் ஏற்படும் ஒளியியல் மாற்றமாகும்.

பூமியின் வளிமண்டலத்தில் மிக உயரத்தில் உள்ள மேகங்களில் (Cirrus clouds) அறுகோண வடிவத்திலான சிறிய பனிப் படிகங்கள் இருக்கும்.

நிலவொளி இந்த பனிப் படிகங்கள் வழியாக ஊடுருவிச் செல்லும்போது, அந்தப் படிகங்கள் ஒரு சிறிய 'பிரிசம்' (Prism) போலச் செயல்பட்டு ஒளியை வளைக்கின்றன.

இவ்வாறு வளையும் ஒளியினால், உண்மையான நிலவிற்கு இருபுறமும் பிரகாசமான ஒளிப்புள்ளிகள் தோன்றுகின்றன. இது பார்ப்பதற்கு வானில் பல நிலவுகள் இருப்பது போன்ற மாயையை உருவாக்குகிறது.

இத்தகைய நிகழ்வுகள் ரஷ்யா போன்ற கடும் குளிர் நிலவும் பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் தற்போது நிலவும் கடுமையான உறைபனி மற்றும் வளிமண்டல குளிர்ச்சி காரணமாக, மேகங்களில் பனிப் படிகங்கள் அதிகமாக உருவானதே இந்த நான்கு நிலவுகள் தோன்றக் காரணமாக அமைந்தது.

நாட்டின் வளர்ச்சி குறித்து ராகுல் காந்திக்கு அக்கறை இல்லை: பியூஸ் கோயல்

அமெரிக்காவின் நெருக்கடிக்கு மோடி பணிந்துவிட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்

தென்னை விவசாயத்தை மேம்படுத்த பட்ஜெட்டில் புதிய திட்டம் அறிவிப்பு

சட்டத்தை மதிக்க முடியாவிட்டால் இந்தியாவில் இருந்து வெளியேறுங்கள்: வாட்ஸ்அப்பிற்கு சுப்ரீம் கோர்ட்டு எச்சரிக்கை

மக்களவையில் அமளி: மாணிக்கம் தாகூர் உள்பட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட்