உலக செய்திகள்

இலங்கையில் இறைச்சிக்காக பதுக்கி வைத்திருந்த ஆமை மீட்பு

இலங்கையில் உள்ள ஒரு வீட்டில் இறைச்சிக்காக பதுக்கி வைத்திருந்த ஆமையை அதிகாரிகள் மீட்டனர்.

தினத்தந்தி

கொழும்பு,

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஆமை, டால்பின், கடல் பசு, நட்சத்திர மீன்கள் உள்ளிட்ட 3,600 வகையான அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் காணப்படுகின்றன.

இந்நிலையில் இலங்கையின் மன்னாரில் உள்ள பனங்கட்டிக்கொட்டி பகுதியில், ஒரு வீட்டில் இறைச்சிக்காக ஆமை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு அதிகாரிகள் சென்றனர். அங்கு மேற்கொண்ட சோதனையில், சுமார் 160 கிலோ கொண்ட அரிய வகை ஆமை இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ஆமையை மீட்டு அதனை பதுக்கி வைத்திருந்தவரை அதிகாரிகள் கைது செய்தனர்.

விசாரணையில் ஆமையை இறைச்சிக்காக பதுக்கி வைத்திருந்தது உறுதி செய்யப்பட்டது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்