உலக செய்திகள்

வங்காளதேசத்தில் சாலை விபத்து; 4 பேர் உயிரிழப்பு

வங்காளதேசத்தில் பக்ரீத் பண்டிகைக்கு கால்நடைகளை வாங்க சென்ற 4 பேர் சாலை விபத்தில் உயிரிழந்து உள்ளனர்.

தினத்தந்தி

டாக்கா,

வங்காளதேசத்தின் ஜஷூர் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையை கொண்டாட பசுக்களை வாங்குவதற்காக கால்நடை வர்த்தகர்கள் சிலர் தனியார் கார் ஒன்றில் சென்றுள்ளனர். அவர்கள் தொப்பகோலா பகுதியில் பேனாபூல் என்ற இடத்தில் சென்றபோது லாரி ஒன்றின் மீது அவர்கள் கார் மோதியது.

இதில், காரில் இருந்த நயன் அலி (வயது 40), ஜோனி மியா (வயது 38), நயீம் உசைன் (வயது 50), சத்மான் (வயது 48) ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். சகாபுதீன் என்ற மற்றொரு நபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை