உலக செய்திகள்

பாரிஸ் நகரில் மெட்ரோ பழுது பணிகளில் ஈடுபடும் 'ரோபோ நாய்'

பாரிசில் மெட்ரோ பழுது பணிகளில் ‘ரோபோ நாய்’ ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

தினத்தந்தி

பாரிஸ்,

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் மெட்ரோ பழுது பணிகளில் 'ரோபோ நாய்' ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த ரோபோ நாய்க்கு 'பெர்சிவல்' (Perceval) என பெயரிடப்பட்டுள்ளது. இது 40 கிலோ எடையும், 3 அடி உயரமும் கொண்டுள்ளது.

நாய்களைப் போன்றே 4 கால்களில் நடந்து செல்லக்கூடிய வகையில் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் இந்த ரோபோ நாய், மனிதர்களால் செல்ல முடியாத கடினமான பகுதிகளுக்குள் நுழைந்து பழுது பணிகளை மேற்கொள்கிறது.

இதே போல் அண்மையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில், காவல் பணிகளில் ஈடுபடுத்துவதற்காக டிஜிடாக் (Digidog) என்ற ரோபோ நாயை நியூயார்க் நகர காவல்துறை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்