உலக செய்திகள்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து கஜகஸ்தானில் பத்திரமாக தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு திரும்பிய வீரர்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

மாஸ்கோ,

விண்வெளி ஆராய்ச்சியில் உலக நாடுகள் பலவும் போட்டி போடுகின்றன. அதன்படி அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பல நாட்கள் தங்கி ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

இதற்காக ரஷிய விண்வெளி வீரர் ஒலெக் நோவிட்ஸ்கி, அமெரிக்காவின் லோரல் ஓ ஹாரா மற்றும் பெலாரஸ் நாட்டின் மெரினா வாசிலேவ்ஸ்காயா ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் அங்கு தங்கி பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து வந்தனர். இந்தநிலையில் அவர்கள் 3 பேரும் சோயுஸ் விண்கலம் மூலம் நேற்று கஜகஸ்தானில் பத்திரமாக தரையிறங்கினர். அவர்கள் அனைவரும் தற்போது நலமுடன் இருப்பதாக நாசா அதிகாரிகள் தெரிவித்தனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்