அங்காரா,
துருக்கியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்க உதவுவதற்காக ரஷ்யாவில் இருந்து பி-200 ரக தீயணைப்பு விமானம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.
அந்த விமானத்தில் ரஷ்ய ராணுவத்தின் 5 விமானிகள் மற்றும் 3 துருக்கி நாட்டு நிபுணர்கள் என மொத்தம் 8 பேர் பயணித்தனர்.
துருக்கியின் அடானா மாகாணம் அருகே விமானம் தரை இறங்கும்போது திடீரென விபத்திற்குள்ளானது. இதில், 8 பேரும் கொல்லப்பட்டனர்.