image courtesy: AFP 
உலக செய்திகள்

கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள சிரியாவில் ரஷியா வான்வழித் தாக்குதல் - 13 பேர் பலி

வடமேற்கு சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உட்பட 13 பேர் பலியாகினர்.

தினத்தந்தி

இட்லிப்,

வடமேற்கு சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உட்பட 13 பேர் பலியாகினர். இது இந்த ஆண்டு சிரியாவின் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் என்று பார்க்கப்படுகிறது.

இட்லிப் பகுதியில் உள்ள ஜிஸ்ர் அல்-ஷுகூரில் உள்ள காய்கறி சந்தையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் இரண்டு குழந்தைகள் உட்பட ஒன்பது பொதுமக்கள் உள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் 30 பொதுமக்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்