கோப்புப்படம் 
உலக செய்திகள்

அமெரிக்காவில் கோவிட் தேசிய அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வர செனட் சபை ஒப்புதல்

அமெரிக்காவில் கோவிட் தேசிய அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வர செனட் சபை ஒப்புதல்

தினத்தந்தி

வாஷிங்டன்,

கொரோனா வைரஸ் பாதிப்பால் அமெரிக்கா உள்பட உலகின் பல நாடுகள் சொல்லொணா துயரம் அடைந்தது. இதனால் அங்கு லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். பலர் உயிரிழந்தனர். எனவே கொரோனா பரவுவதை தடுக்க 2020-ல் அப்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவில் கோவிட் தொடர்பாக தேசிய அவசர நிலையை அறிவித்தார். அதன்படி அங்கு பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

தற்போது அங்கு கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. எனவே கோவிட் அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான மசோதாவை ஜனாதிபதி ஜோ பைடன் அமெரிக்கா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதற்கு செனட் சபை தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. எனவே வருகிற மே மாதத்துக்குள் இந்த கோவிட் தேசிய அவசர நிலை முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது.

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா