உலக செய்திகள்

பதான்கோட் தாக்குதலுக்கு முக்கிய புள்ளியாக செயல்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை

பதான்கோட் தாக்குதலுக்கு முக்கிய புள்ளியாக செயல்பட்ட பயங்கரவாதி ஷாஹித் லதீப் பாகிஸ்தானில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

தினத்தந்தி

இஸ்லாமாபாத்,

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள இந்திய விமானப் படை தளத்தில் கடந்த 2016ம் ஆண்டு பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து 4 நாட்கள் நடைபெற்ற இந்த பயங்கரவாத தாக்குதலில் இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் 7 பேர் வீர மரணம் அடைந்தனர்.

இதற்கு தக்க பதிலடி கொடுத்த இந்திய ராணுவம் 4 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றது. இருப்பினும் அதற்கு முக்கியப் புள்ளியாக இருந்த பயங்கரவாதிகள் தப்பிவிட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், பதான்கோட் தாக்குதலுக்கு முக்கியப் புள்ளியாக இருந்த ஷாஹித் லதீப் என்கிற பயங்கரவாதி பாகிஸ்தானில் உள்ள சைல்கோட்டில் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளார்.

இது குறித்து பாகிஸ்தான் செய்தி நிறுவனங்கள் கூறியிருப்பதாவது:

லதீப்பை சுட்டுக் கொன்றவர்கள், உள்ளூரைச் சேர்ந்தவர்களாக இருக்க வாய்ப்பு உள்ளது. கிளர்ச்சியாளர்கள் தான் அவரை சுட்டுக்கொன்றிருக்க வேண்டும் என தகவல் தெரிவிக்கின்றது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு