வாஷிங்டன்,
அமெரிக்காவின் டெட்ராய்ட் நகர் அருகே உயர்நிலை பள்ளி ஒன்றில் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் 3 மாணவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இதுதவிர, 6 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்களில் ஒருவர் அந்த பள்ளியின் ஆசிரியர் ஆவார். அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.