பாக்தாத்,
ஈராக் நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியில் ராணுவ படைகள் ஈடுபட்டு வருகின்றன. இவற்றில் ஹஸ்த் ஷாபி என்ற துணை ராணுவ படையினர் சலாஹுதீன் பகுதியில் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதில், ஐ.எஸ். தீவிரவாதிகள் 6 பேர் கொல்லப்பட்டனர். இதேபோன்று போலீஸ் சோதனை சாவடியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய பதில் தாக்குதலில் போலீசார் ஒருவர் கொல்லப்பட்டார். மற்றும் அதிகாரி ஒருவர் காயமடைந்து உள்ளார்.
ஈராக் பிரதமர் முஸ்தபா அல் காதிமி நேற்று கூறும்பொழுது, ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்க பெரிய அளவில் ஈராக்கிய படைகள் தாக்குதலில் ஈடுபடும். ஹஸ்த் ஷாபி படைகள் முன்னணியில் இருந்து செயல்படும் என கூறினார்.