உலக செய்திகள்

அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தியது தென்கொரிய வங்கி

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு வட்டி விகிதத்தை உயர்த்தும் முதல் பெரிய நாடு என்ற பெயரை தென்கொரியா பெறுகிறது.

தினத்தந்தி

சியோல்,

தென்கொரியாவில் கடந்த ஜூன் மாதம் வரை கொரோனா தொற்று குறைந்த அளவில் பதிவாகி வந்தது. இந்த நிலையில் அங்கு கடந்த ஒரு வாரமாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சராசரியாக 1,800-ஐ தாண்டி பதிவாகி வருகிறது. இதனால் அங்கு நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் கொரிய வங்கி தனது அடிப்படை வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் முதல் 0.75 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது. இதன் மூலம் கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு வட்டி விகிதத்தை உயர்த்தும் முதல் பெரிய நாடு என்ற பெயரை தென்கொரியா பெறுகிறது.

இது குறித்து கொரிய வங்கியின் கவர்னர் லீ ஜுயியோல் கூறுகையில், வட்டி விகிதங்களை உயர்த்துவதற்கான முடிவு ஒருமனதாக ஏற்கப்படவில்லை. விகிதங்கள் நிலையானதாக இருக்க வேண்டும் என்று குழு உறுப்பினர்கள் சிலர் தெரிவித்தனர். இது குறித்து ஆய்வாளர்களிடையே நடத்தப்பட்ட கருத்து கேட்பின் போது, 30 இல் 16 பேர் மட்டுமே விகித உயர்வை எதிர்பார்க்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்