கோப்புப்படம் 
உலக செய்திகள்

ஸ்பெயின் நாட்டில் 40 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

ஸ்பெயின் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,960 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

மாட்ரிட்,

ஸ்பெயின் நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை குறைவான அளவே பதிவாகி வந்தது.

இந்நிலையில் ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,960 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 40,15,084 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 81 ஆயிரத்து 033 ஆக உயர்ந்துள்ளது.

ஸ்பெயின் நாட்டில் கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 4,142 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், இதுவரை 36 லட்சத்து 52 ஆயிரத்து 580 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 2,81,471 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு