கோப்புப்படம் 
உலக செய்திகள்

குரங்கு அம்மை பாதிப்பால் பிரேசில், ஸ்பெயினில் தலா ஒருவர் பலி

குரங்கு அம்மை பாதிப்பால் பிரேசில், ஸ்பெயினில் தலா ஒருவர் பலியாகி உள்ளனர்.

தினத்தந்தி

பிரேசிலியா,

குரங்கு அம்மை நோய்க்கு இதுவரை ஆப்பிரிக்காவுக்கு வெளியே பிற எந்தவொரு நாட்டிலும் உயிர்ப்பலி இல்லை என்ற நிலை இப்போது மாறி இருக்கிறது.

இந்த தொற்றுக்கு பிரேசில் நாட்டில் 41 வயதான ஆண் ஒருவர் பலியாகி இருக்கிறார். இவர்தான் ஆப்பிரிக்காவுக்கு வெளியே குரங்கு அம்மையால் பலியான முதல் நபர் என தகவல்கள் கூறுகின்றன. கடுமையான நோய் எதிர்ப்பு பிரச்சினைகள் இவருக்கு இருந்ததாக அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.

ஸ்பெயின் நாட்டிலும் ஒருவர் இந்த தொற்றுக்கு பலியாகி இருக்கிறார். பலியானவர் பற்றிய எந்த தகவலையும் அந்த நாடு வெளியிடவில்லை.

குரங்கு அம்மையால் உலகளவில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடு இது என்பது பதிவு செய்யத்தக்கது. இங்கு இந்த நோய், 4,298 பேருக்கு பாதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு