உலக செய்திகள்

காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள் விவகாரம்: ரனில் விக்ரமசிங்கே

காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள் விவகாரம் என்று இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

கொழும்பு,

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது. இந்த சூழலில், காஷ்மீர் விவகாரத்தில், உலக நாடுகள் தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான் கூறி வந்த நிலையில், காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என அமெரிக்கா தெரிவித்து விட்டது.

இதேபோல், காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்விவகாரம் என்று இலங்கை பிரதமர் ரனில் விக்ரம சிங்கே தெரிவித்துள்ளார். இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- லடாக்கில் தற்போது 70 சதவீத புத்த மதத்தினர் உள்ளனர். புத்த மதத்தினர் பெரும்பான்மையாக உள்ள முதல் இந்திய மாநிலமாக (யூனியன் பிரதேசம்) லடாக் மாற உள்ளது. நாம் சுற்றுலா செல்வதற்கு லடாக் அழகான பகுதி. காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்விவகாரம் என தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து