உலக செய்திகள்

பெட்ரோலிய பொருட்கள் கொள்முதலுக்காக இந்தியாவிடம் ரூ.3,750 கோடி கடன் கேட்கிறது, இலங்கை

பெட்ரோலிய பொருட்கள் கொள்முதலுக்காக இந்தியாவிடம் ரூ.3,750 கோடி கடனை இலங்கை கேட்க உள்ளது.

தினத்தந்தி

கொழும்பு,

அன்னிய செலாவணி பற்றாக்குறையால், இலங்கையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவுகிறது. அதனால், அந்த பொருட்களை பெற ஒவ்வொரு வாய்ப்பையும் இலங்கை பரிசீலித்து வருகிறது.

இலங்கை மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில், பெட்ரோலிய பொருட்கள் கொள்முதல் செய்வதற்காக இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியிடம் (எக்சிம் வங்கி) 50 கோடி டாலர் (ரூ.3 ஆயிரத்து 750 கோடி) கடன் கேட்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இத்தகவலை இலங்கை எரிசக்தி மந்திரி காஞ்சனா விஜேசேகரா தெரிவித்தார். எக்சிம் வங்கியிடம் இலங்கை இதற்கு முன்பும் ரூ.3 ஆயிரத்து 750 கோடி கடன் பெற்றுள்ளது.

இதற்கிடையே, இலங்கையில் நேற்று பெட்ரோல் விலை 24.3 சதவீதமும், டீசல் விலை 38.4 சதவீதமும் உயர்த்தப்பட்டது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்