கோப்புப்படம் 
உலக செய்திகள்

தமிழ் கட்சிகளுடன் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பேச்சுவார்த்தை

இந்தியாவில் அகதி முகாம்களில் உள்ள இலங்கையர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

கொழும்பு,

இலங்கை அதிபராக கடந்த ஆண்டு பதவியேற்றது முதல் தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக தமிழ் கட்சிகளுடன் ரணில் விக்ரமசிங்கே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

அந்த வகையில் நேற்று தலைநகர் கொழும்புவில் தமிழ் கட்சியின் தலைவர்களுடன் அதிபர் ரணில் விக்ரமசிங்கே பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களுக்கான நில உரிமைகளை வழங்குதல், மீள்குடியேற்றம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான சட்டங்களை அமல்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் இந்தியாவில் அகதி முகாம்களில் உள்ள இலங்கையர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது என்று இலங்கை அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து