உலக செய்திகள்

இந்தோனேசியாவில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 6.2 ஆக பதிவு

இந்தோனேசியாவில் இன்று ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் ரிக்டரில் 6.2 ஆக பதிவாகி உள்ளது.

ஜகார்த்தா,

இந்தோனேசியாவில் கிழக்கு ஜாவா மாகாணத்தில் இன்று நண்பகல் 1.07 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 6.2 ஆக பதிவாகி உள்ளது.

நிலநடுக்கம் ஜெம்பர் பகுதியில் இருந்து 284 கி.மீ. தென்மேற்கே உணரப்பட்டு உள்ளது. இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய புவிஇயற்பியல் கழகம் அறிவித்து உள்ளது.

எனினும், சுனாமி பேரலைகளை ஏற்படுத்தும் அளவுக்கு இந்நிலநடுக்கம் ஆற்றல் கொண்டிருக்கவில்லை என்றும் தகவல் தெரிவிக்கின்றது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...